பதிவு செய்த நாள்
05 ஆக2013
01:47
அத்தியாவசியமற்ற ஆடம்பர பொருள்களின் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால், மின்னணு பொருட்கள், நுகர்வோர்சாதனங்கள் உள்ளிட்ட வற்றின் விலை மேலும் உயரும். நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதற் கான முயற்சிகளை மத்திய அர” மேற்கொண்டுள்ளது.
ரூபாய்மதிப்பு:இதன்படி தங்கத்திற்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால், அதன் இறக்குமதி குறைந்துள்ளது. அதேசமயம், கச்சா எண்ணெய்விலை உயர்வும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பின்சரிவும், மத்திய அரசின் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன.இதனால், தங்கம், கச்சா எண்ணெய்தவிர்த்து, வேறு எந்தெந்த பொருள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தலாம் என்று மத்திய அரசு சிந்தித்தது.
இதன் விளைவாக, மத்திய அமைச்சரவைக் குழு, அதிக அளவில் இறக்குமதியாகும், 400 பொருட்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இதில், அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருள்களை தேர்வு செய்து, அவற்றின் மீதான இறக்குமதி வரியை உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.குறிப்பாக, எல்.இ.டீ., எல்.சி.டீ டி.வி., மொபைல் போன், "ஏசி' ரெப்ரி ஜரேட்டர், லேப்-டாப், கம்ப்யூட்டர், கார், முத்துக்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று தெரி கிறது.
மின்னணுசாதனங்கள்:ரூபாய்மதிப்பின்சரிவால், ஏற்கனவே, மேற்கண்ட பொருள்களின் விலை உயர்ந்து உள்ள நிலை யில்,சுங்க வரியும் உயர்த்தப்பட்டால், அது, இறக்குமதியாளர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர் பார்க்கப்படுகிறது.சென்ற2012-13ம் நிதியாண்டில், இந்தியா,49ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள பல்வேறு பொருட் களை, இறக்குமதி செய்துள்ளது. இதில், 6.3சதவீதம், அதாவது, 3,100 கோடி டாலர் அளவிற்கே, மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
முத்துக்கள், விலை உயர்ந்த நவரத்தினங்கள், நடுத்தர வகையை சேர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவற்றின் பங்களிப்பு, 4.4சதவீதமாக (2,200 கோடி டாலர்) உள்ளது. கச்சா எண்ணெய், தங்கம், மின்னணுசாதனங்கள் நீங்கலான, இயந்திர தள வாடங்கள் ஆகியவை முறையே, 34.4சதவீதம், 11சதவீதம் மற்றும், 5.5சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர்,"" அனைத்து நுகர்வோர்சாதனங்களும், ஆடம்பர பொருட்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், நாட்டின் மொத்த இறக்மதியில், அவற்றின் பங்களி ப்பு மிகச் சிறிய அளவிலேயே உள்ளது,'' என்றார்.
தாராள வர்த்தக ஒப்பந்தம்:இதன் காரணமாக,சுங்க வரியை உயர்த்துவதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகப் பெரிய அளவில் குறைவதற்கான,சாத்தியக் கூறு இல்லை என்று கூறப்படுகிறது.எர்னஸ்ட் யங் நிறுவனத்தின், வரி ஆலோசகர் பிபின்சப்ரா, ""இந்தியா, பல நாடுகளுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால், குறிப்பிட்ட சில சாதனங் களின் இறக்குமதி வரியை, தன்னிச்சையாக உயர்த்த முடியாத நிலையில் உள்ளது, என்று தெரிவித்தார். மத்திய அரசு, அழகுசாதனங்கள், ஆடம்பர நுகர்வோர் பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்தலாம்.
பாதிப்பு:ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறைசார்ந்த அத்தியாவசியசாதனங்களான கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லெட் போன்றவற்றுக்கான இறக்குமதி வரியை உயர்த்தக் கூடாது என, டிலாய்டி நிறுவனத்தின் மூத்த இயக்குனர் பிரசாந்த் தேஷ்பாண்டே தெரிவித்தார்.இறக்குமதியில், அதிக மதிப்புள்ள பொறியியல்சாதனங்களுக்கு வரியை உயர்த்தினால், தொழில் துறை பாதிக்கும். அதேசமயம், அத்தியாவசியப் பொருட்களான கச்சா எண்ணெய், நிலக்கரி போன்றவற்றின் சுங்க வரியை உயர்த்தினால், நுகர்வோர் பாதிக்கப்படுவர்.
இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய அரசுஎடுக்கும் முடிவு, நாட்டின் பணவீக்க உயர்விற்கு வழி கோலாத வகையில் இருக்க வேண்டும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|