பதிவு செய்த நாள்
05 ஆக2013
10:27
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.90 புள்ளிகள் அதிகரித்து 19181.92 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 4.50 புள்ளிகள் அதிகரித்து 5682.40 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளியன்று, சரிவுடன் முடிவடைந்தது.அமெரிக்க தயாரிப்புத் துறையின் வளர்ச்சி குறித்த புள்ளி விவரம், வேலை வாய்ப்பு அதிகரிப்பு குறித்து வெளியான தகவல் போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.இதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|