பதிவு செய்த நாள்
05 ஆக2013
11:16
சென்னை : வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, நீட்டிக்கப்பட்ட, ஐந்து நாள் அவகாசம் இன்றுடன் முடிகிறது. சம்பளதாரர்கள், தனி நபர்கள், தொழில் செய்வோர், 2012-13ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, ஜூலை, 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, வருமான வரித்துறை அறிவித்திருந்தது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளோர், ஆன்-லைனில் கணக்குகளை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாலும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, மேலும், ஐந்து நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, இன்று (ஆக., 5) கடைசி நாளாகும். சிறப்பு கவுன்டர்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில், வருமான வரி அலுவலகங்களில் இன்று வழக்கம் போல், கணக்குகளை தாக்கல் செய்யலாம். இதுவரை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நேரடியாக வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|