பதிவு செய்த நாள்
06 ஆக2013
02:29
மும்பை:சரக்குகளை கையாள்வதில், பொதுத் துறையைச் சேர்ந்த துறைமுகங்களை காட்டிலும், தனியார் துறைமுகங்கள் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, தரக்குறியீட்டு நிறுவனமான "இக்ரா' தெரிவித்துள்ளது.
சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதி, அதிக செயல்பாட்டு திறன் போன்ற காரணங்களால், தனியார் துறை துறை முகங்கள் சரக்கு கையாளும் திறன் சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது.இதனை எடுத்துக்காட்டும் வகையில், அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படும், முந்த்ரா போர்ட், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்), 2.40 கோடி டன் சரக்கை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இது, அதிகளவில் சரக்கை கையாளும் பொதுத் துறையைச் சேர்ந்த கண்ட்லா துறைமுகத்தை (2.30 கோடி டன்) காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், சரக்கை கையாள்வதில், முக்கிய துறைமுகங்களின் பங்களிப்பு, 61 சதவீதமாக இருந்தது.இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில்,58 சதவீதமாக குறைந்து போனது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண் டிலும், முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 1 சதவீதம் குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், முக்கிய துறை முகங்கள் கையாண்ட சரக்கு, 3 சதவீதம் குறைந்துள்ள நிலையில், தனியார் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|