பதிவு செய்த நாள்
07 ஆக2013
00:28
புதுடில்லி:கோல் இந்தியா நிறுவனம், சென்ற ஜூன் மாதம் வரையிலுமாக, மின் துறைக்கு, 8.64 கோடி டன் நிலக்கரியை வழங்கியுள்ளது என, நிலக்கரி துறை இணை அமைச்சர் பிரதிக் பிரகாஷ் பாபு பாட்டீல், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:உள்நாட்டில், மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு, எரிபொருளான, 9.64 கோடி டன் நிலக்கரியை சப்ளை செய்யும் வகையில், கோல் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சென்ற ஜூன் மாதம் வரையிலுமாக, மொத்த நிலக்கரி அளிப்பில், 87.8 சதவீதத்தை, அதாவது, 8.64 கோடி டன் நிலக்கரியை, கோல் இந்தியா, மின் துறைக்கு சப்ளை செய்துள்ளது.
கோல் இந்தியா நிறுவனம், மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 34.38 கோடி டன் நிலக்கரியை வழங்கியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டில், கோல் இந்தியா நிறுவனம் வழங்கும், நிலக்கரிக்கான சப்ளை இலக்கு, 34.23 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பாட்டீல் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|