பதிவு செய்த நாள்
07 ஆக2013
00:49
கொச்சி:அதிகளவில் மிளகு உற்பத்தியாகும் கேரள மாநிலத்தில், மழை பொழிவு அதிகரித்துள்ளதால், சந்தைக்கு இதன் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பண்டிகை காலங்கள் வருவதால், இதன் விலை உயரும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உற்பத்தி:தற்போது, கொச்சி நடப்பு சந்தையில் ஒரு கிலோ மிளகின் விலை, 400 ரூபாய் என்ற அளவில் உள்ளது. நடப் பாண்டில், உள்நாட்டில், மிளகு உற்பத்தி, 55 ஆயிரம் டன் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல விவசாயிகள் இதன் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பால், மிளகை இருப்பு வைத்துள்ளனர். இதனாலும், மிளகு வரத்து குறைந்து போயுள்ளது.
இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்தும், சர்வதேச சந்தைக்கு மிளகு வரத்து குறைந்துள்ளது. நடப்பு 2013ம் ஆண்டில், முதல் ஏழு மாத காலத்தில், வியட்நாம் நாடு, 95 ஆயிரம் டன் மிளகை விற்பனை செய்துள்ளது.பொதுவாக, இந்தோனேஷியாவிலிருந்து, சர்வதேச சந்தைக்கு, மிளகு, ஜூலை மாதத்திலிருந்து வரத் துவங்கும். பிரேசில் நாட்டின் மிளகு, ஆகஸ்ட் மாதத்திலிருந்து, வரத் துவங்கும்.
தட்பவெப்ப நிலை:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், டிசம்பர் முதற்கொண்டு, மிளகிற்கான தேவை அதிகரிக் கும்.கேரளாவில், கடுமையாக மழை பெய்து வருவதால், இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மிளகை பொறுத்த வரையில், மிதமான தட்பவெப்ப நிலை இருந்தால் மட்டுமே இதன் உற்பத்தி நல்ல அளவில் இருக்கும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர். எனவே, உள்நாட்டு சந்தைக்கு மிளகு வரத்து குறைந்துள்ளதால், இதன் விலை உயர வாய்ப்புள்ளது என, அவர்கள் மேலும் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|