கிராமப்புறங்களில்  அலைபேசி வாடிக்கையாளர்கள் அதிகரிப்புகிராமப்புறங்களில் அலைபேசி வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பில் தொடருது சரிவு ரூபாயின் மதிப்பில் தொடருது சரிவு ...
வரத்து குறைந்துள்ளதால் மிளகு விலை உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2013
00:49

கொச்சி:அதிகளவில் மிளகு உற்பத்தியாகும் கேரள மாநிலத்தில், மழை பொழிவு அதிகரித்துள்ளதால், சந்தைக்கு இதன் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பண்டிகை காலங்கள் வருவதால், இதன் விலை உயரும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உற்பத்தி:தற்போது, கொச்சி நடப்பு சந்தையில் ஒரு கிலோ மிளகின் விலை, 400 ரூபாய் என்ற அளவில் உள்ளது. நடப் பாண்டில், உள்நாட்டில், மிளகு உற்பத்தி, 55 ஆயிரம் டன் என்ற அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல விவசாயிகள் இதன் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பால், மிளகை இருப்பு வைத்துள்ளனர். இதனாலும், மிளகு வரத்து குறைந்து போயுள்ளது.
இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்தும், சர்வதேச சந்தைக்கு மிளகு வரத்து குறைந்துள்ளது. நடப்பு 2013ம் ஆண்டில், முதல் ஏழு மாத காலத்தில், வியட்நாம் நாடு, 95 ஆயிரம் டன் மிளகை விற்பனை செய்துள்ளது.பொதுவாக, இந்தோனேஷியாவிலிருந்து, சர்வதேச சந்தைக்கு, மிளகு, ஜூலை மாதத்திலிருந்து வரத் துவங்கும். பிரேசில் நாட்டின் மிளகு, ஆகஸ்ட் மாதத்திலிருந்து, வரத் துவங்கும்.
தட்பவெப்ப நிலை:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், டிசம்பர் முதற்கொண்டு, மிளகிற்கான தேவை அதிகரிக் கும்.கேரளாவில், கடுமையாக மழை பெய்து வருவதால், இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மிளகை பொறுத்த வரையில், மிதமான தட்பவெப்ப நிலை இருந்தால் மட்டுமே இதன் உற்பத்தி நல்ல அளவில் இருக்கும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர். எனவே, உள்நாட்டு சந்தைக்கு மிளகு வரத்து குறைந்துள்ளதால், இதன் விலை உயர வாய்ப்புள்ளது என, அவர்கள் மேலும் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)