பதிவு செய்த நாள்
07 ஆக2013
10:10
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வரலாற்று பெரும் சரிவை சந்தித்த நிலையில் இன்றும் சரிவு நிலை தொடர்கிறது. வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில்(09.26 மணியளவில்) இந்திய ரூபாயின் மதிப்பில் 50 காசுகள் சரிந்து ரூ.61.29-ஆக இருந்தது. தொடர்ந்து 11.45 மணியளவில் ரூ.61.36-ஆக இருந்தது.
முன்னதாக நேற்று(ஆகஸ்ட் 6ம் தேதி) ரூபாயின் மதிப்பு வரலாற்று பெரும் சரிவாக ரூ.61.80 எனும் நிலையை தொட்டது. பின்னர் ரிசர்வ் வங்கியின் அடுத்த புதிய கவர்னராக தற்போதைய பொருளாதார தலைமை ஆலோசகர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட இருப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து ரூபாயின் மதிப்பு கொஞ்சம் மீண்டு ரூ.60.77 எனும் நிலையில் முடிந்தது.
உலகளவில் டாலருக்கு எதிராக பிறநாடுகளின் கரன்சி மதிப்பு சரிந்து காணப்படுவது, இந்திய உள்நாட்டு சந்தையில் காணப்படும் சரிவு மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அதிகளவு டாலர் தேவைப்படுவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|