பதிவு செய்த நாள்
08 ஆக2013
00:55
புதுடில்லி:நடப்பு 2012 - 13ம் ஆண்டிற்கான கரும்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், ஜூன் மாதம் வரையிலுமாக, சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 5,821 கோடி ரூபாயாக உள்ளது என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் பார்லிமென்டில் தெரிவித்தார்.
மேற்கண்ட தொகை, ஜூன் மாதம் வரையிலுமான, 58,807 கோடி ரூபாயில், 10 சதவீதமாகும். நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, 58,807 கோடி ரூபாயில், இது வரை, 52,896 கோடி ரூபாய்வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டில், சர்க்கரை அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படும், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகை, மிகவும் அதிகபட்சமாக, 4,235 கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கரும்பு ஆலைகள், விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய தொகை முழுவதையும் அளித்து விட்டன.
நிலுவையில் உள்ள மொத்த தொகையில், உத்தர பிரதேசம் தவிர, தமிழ்நாடு, உத்தரகண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங் களில் உள்ள ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகை முறையே, 501 கோடி, 376 கோடி மற்றும் 353 கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|