கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.5,821 கோடி நிலுவைகரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.5,821 கோடி நிலுவை ... வலைதளம் மூலம் 1.23 கோடி பேர்வருமான வரி கணக்கு தாக்கல் வலைதளம் மூலம் 1.23 கோடி பேர்வருமான வரி கணக்கு தாக்கல் ...
"இந்தியாவிற்கான நிலக்கரி ஏற்றுமதியை இந்தோனேஷியா குறைக்காது'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
00:56

புதுடில்லி: இந்தியா, மிக அதிகளவில் இந்தோனேஷியாவிலிருந்து, நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது. இந்தோ னேஷியா, அதன் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என, அண்மை யில் தெரிவித்துஇருந்தது.
ஆலோசனை:இந்நிலையில், இந்தோனேஷியாவின் தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவர் சூர்யோபீசுலி ஸ்டோ, இந்தியாவிற்கான நிலக்கரி ஏற்றுமதியை குறைக்க வாய்ப்பில்லை என, தெரிவித்து உள்ளார்.கடந்த மாதம், இந்தியாவிற்கான, இந்தோனேஷிய தூதர் ரிசாலி டபிள்யூ இந்திரகேசுமா, இந்தோனேஷிய அரசு, இந்தியாவிற்கான, குறைந்த எரி திறன் கொண்ட நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் வகையில் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
இதனால், இந்தியாவில் உள்ள டாட்டா பவர், அதானி பவர் உள்ளிட்ட, பல மின் உற்பத்தி நிறுவனங்கள் கவலை தெரி வித்து இருந்தன.இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தந்த சூர்யோ சுலிஸ்டோ, இது குறித்து கூறியதாவது: இந்தோ னேஷியாவில் அபரிமிதமாக நிலக்கரி வளம் உள்ளது. என்றாலும், நாட்டின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, நிலக்கரி ஏற்றுமதி மேற்கொள்வதற்கு எதிர்ப்பு உள்ளது.ஆனால், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில், 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் நிலையில், அன்னியச் செலாவணி வரத்து குறைந்து போகும்.
தேவை:இந்தோனேஷியாவை பொறுத்த வரையில், நிலக்கரிக்கான தேவை குறைவாகவே உள்ளது. எனவே, இந்தியா விற்கான நிலக்கரி ஏற்றுமதிக்கு அரசு, தடை விதிக்காமல், தொடர்ந்து சப்ளை செய்யும்.இவ்வாறு, சுலிஸ்டோ கூறினார். இந்தியாவில், மின் உற்பத்தி நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, நிலக்கரி உற்பத்தி இல்லாததால், நம்நாடு, நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக, இந்தோனேஷியாவிலிருந்து, அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது. இந்நாட்டின் பங்களிப்பு, 70 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இறக்குமதி:நடப்பு 2013 - 14ம் நிதியாண்டில், இந்தியாவிற்கான நிலக்கரி தேவை, 76.90 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதில்,61.46 கோடி டன் நிலக்கரி உள்நாட்டில் உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது. மீதமுள்ள, 16.5-18 கோடி டன் நிலக்கரிக்கான தேவை, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)