ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம்உருக்கு உற்பத்தி அதிகரிப்புஜே.எஸ்.டபிள்யூ நிறுவனம்உருக்கு உற்பத்தி அதிகரிப்பு ... ஏற்றுமதிக்கு தடை விதிக்க அரசு மறுப்பு: வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டும் ஏற்றுமதிக்கு தடை விதிக்க அரசு மறுப்பு: வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
புண்ணாக்கு ஏற்றுமதி 37 சதவீதம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2013
01:02

புதுடில்லி:நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற ஜூலை மாதத்தில், 1.77 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.83 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 37 சதவீதம் சரிவடைந்துள்ளது என, இந்திய எண்ணெய்உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சோயா புண்ணாக்கு:மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 36.42 சதவீதம் சரிவடைந்து, 1.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதுகுறித்து, சோயா பதப்படுத்துவோர் கூட்டமைப்பு (எஸ்.ஓ.பி.ஏ.,) வெளியிட்டுள்ள அறிக்கை :சென்ற ஜூலை மாதம், கால்நடை தீவனம் தயாரிக்க பயன்படும், சோயா புண்ணாக்கின் ஏற்றுமதி, 1.07 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.
அதே சமயம், சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 1.68 லட்சம் டன் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.நடப்பு, 2012-13ம் எண்ணெய்பருவத்தின் (அக்.,-செப்.,), முதல் 10 மாதங்களில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 31.15 லட்சம் டன்னாக இருந்தது.
இது, சென்ற எண்ணெய்பருவத்தின் இதே காலத்தில், 36.10 லட்சம் டன்னாக உயர்ந்திருந்தது.பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரானுக்கு, அதிக அளவில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையை விட, உள்நாட்டில் சோயா புண்ணாக்கு விலை அதிகமாக உள்ளதால், அதன் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனாவின் தடை :கடந்த, 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 48 லட்சம் டன்னாக இருந்தது. இந் நிலையில்,சென்ற, 2012-13ம் நிதியாண்டில்,இதன் ஏற்றுமதி,14.3 சதவீதம் வீழ்ச்சி கண்டது.இதற்கு, ஆபத்து விளை விக்க கூடிய ரசாயனங்கள் இந்திய புண்ணாக்கில் உள்ளதாக கூறி, சீனா தடை விதித்ததே முக்கிய காரணமாகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)