பதிவு செய்த நாள்
08 ஆக2013
14:51
துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் அதிக முதலீடு செய்து பிற நாட்டினரைக் காட்டிலும் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 2013 ஜனவரி–ஜூன் மாத காலத்தில் அங்கு இந்தியர்கள் ரூ.13,260 கோடி முதலீடு செய்து முதலிடத்தில் உள்ளதாக துபாய் நிலத்துறையின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது. 2012 முழு ஆண்டில் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியர்கள் ரூ.14,900 கோடி முதலீடு செய்திருந்தனர். நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏறக்குறைய இதே அளவிற்கு தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடு, மனைகள் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்காக இந்த அளவு முதலீட்டை இந்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஜனவரி–ஜூன் மாத காலத்தில் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் மொத்தம் ரூ.87,750 முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களின் பங்கு ரூ.13,260 கோடியாக உள்ளது. அரேபியர்களின் முதலீடு 111 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.8,270 கோடியாக உயர்ந்துள்ளது. வளைகுடா பகுதி முதலீட்டாளர்கள் ரூ.26,480 கோடி முதலீடு செய்துள்ளனர். இது 57 சதவீத வளர்ச்சியாகும். பாகிஸ்தானியரின் முதலீடு ரூ.4,970 கோடியாகவும், பிரிட்டிஷ் நாட்டினரின் முதலீடு ரூ.6,630 கோடியாகவும் உள்ளது. மொத்தத்தில் மற்ற நாட்டினரின் முதலீடு 73 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|