தந்தி நிறுத்தம்:பிஎஸ்என்எல்.,க்கு ரூ.132.79 கோடி இழப்புதந்தி நிறுத்தம்:பிஎஸ்என்எல்.,க்கு ரூ.132.79 கோடி இழப்பு ... தேயிலை உற்பத்தியில் தெற்கை விஞ்சியது வடக்கு தேயிலை உற்பத்தியில் தெற்கை விஞ்சியது வடக்கு ...
துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 18.45 கோடி டன்:நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2013
00:21

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 18.45 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் கையாளப்பட்ட, (18.37 கோடி டன்) சரக்கின் அளவை விட, 0.47 சதவீதம் அதிகம் என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள, தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில், 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றுள், ஆறு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு அதிகரித்தும், ஏழு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு சரிவடைந்தும் உள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், நம் நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி குறைந்திருந்தது. இதனால், கடந்த ஒரு சில மாதங்களாக, இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு குறைந்திருந்தது.இந்நிலையில், ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த நான்கு மாத காலத்தில், ஒட்டு மொத்த அளவில், துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.
கோல்கட்டா:கோல்கட்டாவில் இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளன. இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் கையாண்ட சரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், 8.11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.85 லட்சம் டன்னிலிருந்து, 40.92 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.
இதே போன்று, ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ், கையாண்ட சரக்கின் அளவு, 3.57 சதவீதம் அதிகரித்து, 97.56 லட்சம் டன்னில் இருந்து, 1.01 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. ஆக, இவ்விரு துறைமுகங்களும் கையாண்ட சரக்கின் அளவு, 4.84 சதவீதம் அதிகரித்து, 1.35 கோடி டன்னிலிருந்து, 1.42 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
பரதீப்:கணக்கீட்டு காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 42.83 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.62 கோடி டன்னில்இருந்து, 2.31 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 4.36 சதவீதம் குறைந்து, 2.06 கோடி டன்னிலிருந்து, 1.97 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.
எண்ணூர்:தமிழகத்தில், மூன்று பெரிய துறைமுகங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள், நிறுவன அளவில், செயல்பட்டு வரும் எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, மிக அதிகபட்சமாக, 54.30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 54.22 லட்சம் டன்னிலிருந்து, 83.66 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது.
அதேசமயம், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 4.97 சதவீதம் குறைந்து, 1.84 கோடி டன்னிலிருந்து, 1.75 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 3.81 சதவீதம் சரிவடைந்து, 95.36 லட்சம் டன்னிலிருந்து, 91.73 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
கொச்சி:கேரளாவில் அமைந்துள்ள கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், 0.13 சதவீதம் குறைந்து, 69.21 லட்சம் டன்னில் இருந்து, 69.12 லட்சம் டன்னாக சற்று குறைந்துள்ளது.
புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 14.78 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.12 கோடி டன்னிலிருந்து, 1.29 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது.இந்நிலையில், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, மிகவும் அதிகபட்சமாக, அதாவது, 67.92 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.06 கோடி டன்னில்இருந்து, 34.12 லட்சம் டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது.
மும்பை:மதிப்பீட்டு காலத்தில், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 10.10 சதவீதம் குறைந்து, 1.97 கோடி டன்னில்இருந்து, 1.77 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. ஜவகர்லால் நேரு துறைமுகம் (ஜே.என்.பி.டி.,) கையாண்ட சரக்கின் அளவும், 6.63 சதவீதம் சரிவடைந்து, 2.22 கோடி டன்னில் இருந்து, 2.08 கோடி டன்னாக குறைந்துள்ளது.
கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, கணக்கீட்டு காலத்தில், 5.28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.92 கோடி ட­ன்னிலிருந்து, 3.08 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது. இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)