பதிவு செய்த நாள்
09 ஆக2013
00:25
குன்னூர்:தென் மாநிலங்களில், தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், வட மாநிலங்களில், கடந்த, ஆறு மாதங்களில் தேயிலை தூள் உற்பத்தி, 4.11 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல், ஜூன் வரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி, 37.99 கோடி கிலோவாக இருந்தது.
நடப்பாண்டு, இதே காலத்தில், 39.56 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆக, 1.57 கோடி கிலோ தேயிலை கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தென் மாநிலங்களில், தமிழகத்தில் கடந்தாண்டை விட நடப்பாண்டு, 20 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ளது. கடும் வறட்சி, மழையின்மையால் தமிழகத்தில் தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், தென் மாநிலங்களில் மொத்தம், 11.54 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு, 8.29 கோடி கிலோ.
ஜனவரி முதல் மே வரையிலான உற்பத்தி, 8 கோடியே 49 லட்சம் கிலோவிலிருந்து, 8.29 கோடி கிலோவாக உற்பத்தி குறைந்துள்ளது. அதே சமயம், கேரளாவில், 3 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி மொத்தம், 28.01 கோடி கிலோவாகும். டார்ஜீலிங், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. அசாமில், கன மழை காரணமாக, தேயிலை உற்பத்தியில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி குறைந்து உள்ளது என்றாலும் வட மாநிலங்களில் கடந்த, ஆறு மாதங்களில், இதன் உற்பத்தி, 4.11 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|