துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 18.45 கோடி டன்:நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில்...துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 18.45 கோடி டன்:நடப்பு நிதியாண்டின் முதல் 4 ... ... நெடுஞ்சாலைகள் திட்டம்: மத்திய அரசின் இலக்கு தவறியது நெடுஞ்சாலைகள் திட்டம்: மத்திய அரசின் இலக்கு தவறியது ...
தேயிலை உற்பத்தியில் தெற்கை விஞ்சியது வடக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2013
00:25

குன்னூர்:தென் மாநிலங்களில், தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், வட மாநிலங்களில், கடந்த, ஆறு மாதங்களில் தேயிலை தூள் உற்பத்தி, 4.11 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல், ஜூன் வரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி, 37.99 கோடி கிலோவாக இருந்தது.
நடப்பாண்டு, இதே காலத்தில், 39.56 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆக, 1.57 கோடி கிலோ தேயிலை கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.தென் மாநிலங்களில், தமிழகத்தில் கடந்தாண்டை விட நடப்பாண்டு, 20 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ளது. கடும் வறட்சி, மழையின்மையால் தமிழகத்தில் தேயிலை உற்பத்தி செய்யும் அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், தென் மாநிலங்களில் மொத்தம், 11.54 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு, 8.29 கோடி கிலோ.
ஜனவரி முதல் மே வரையிலான உற்பத்தி, 8 கோடியே 49 லட்சம் கிலோவிலிருந்து, 8.29 கோடி கிலோவாக உற்பத்தி குறைந்துள்ளது. அதே சமயம், கேரளாவில், 3 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி மொத்தம், 28.01 கோடி கிலோவாகும். டார்ஜீலிங், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. அசாமில், கன மழை காரணமாக, தேயிலை உற்பத்தியில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தென் மாநிலங்களில் தேயிலை உற்பத்தி குறைந்து உள்ளது என்றாலும் வட மாநிலங்களில் கடந்த, ஆறு மாதங்களில், இதன் உற்பத்தி, 4.11 சதவீதம் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)