பதிவு செய்த நாள்
09 ஆக2013
00:29
புதுடில்லி:நடப்பு, 2013-14ம் நிதியாண்டிற்கான, நாட்டின் ஜவுளி ஏற்றுமதி இலக்கை, மத்திய அரசு, 4,300 கோடி டாலராக (2.54 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது. முன்பு இந்த இலக்கு, 3,600 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டில் ஜவுளி துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்து வருவது போன்றவற்றால், நாட்டின் ஜவுளி துறை ஏற்றுமதி இலக்கு உயர்த்தப்பட்டு உள்ளது என, மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.கடந்த நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 3,400 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்களிப்பு, 65 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|