பதிவு செய்த நாள்
09 ஆக2013
00:30
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தில், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 8,400 கோடி ரூபாய்திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி, கோல் இந்தியாவில், 31.58 கோடி பங்குகள், கோரிக்கை அடிப்படையிலான பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இச்செயல்பாடுகளுக்கு, ஏழு வர்த்தக வங்கிகளை நியமிப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
கோல் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசு, 90 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. இதில், 10 சதவீதத்தை விற்பனை செய்ய முன்னர் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பங்கு விற்பனைக்கு, தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தற்போது, 5 சதவீத பங்குகளை மட்டும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு ஒன்று, தற்போது, 268 ரூபாய்என்ற அளவில் விலை போய்க்கொண்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய்திரட்ட திட்டமிட்டுள்ளது. அதில், தற்போது, 1,300 கோடி ரூபாய்அளவிற்கு தான் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|