கோல் இந்தியா பங்கு விற்பனையில்ரூ.8,400 கோடி திரட்ட  அரசு திட்டம்கோல் இந்தியா பங்கு விற்பனையில்ரூ.8,400 கோடி திரட்ட அரசு திட்டம் ... தங்கம் விலை கிடுகிடு உயர்வு:சவரன் ரூ.21,376 தங்கம் விலை கிடுகிடு உயர்வு:சவரன் ரூ.21,376 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தையில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2013
03:29

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.சீனாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தது.
நேற்றைய வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு மற்றும் மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 124.46 புள்ளிகள் அதிகரித்து, 18,789.34 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,829.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,621.67 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, சிப்லா, மாருதி, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சன்பார்மா, டாக்டர் ரெட்டீஸ், விப்ரோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 46.55 புள்ளிகள் உயர்ந்து, 5,565.65 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,577.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,510.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)