பதிவு செய்த நாள்
09 ஆக2013
03:29
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.சீனாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தது.
நேற்றைய வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு மற்றும் மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 124.46 புள்ளிகள் அதிகரித்து, 18,789.34 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,829.26 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,621.67 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹிண்டால்கோ, சிப்லா, மாருதி, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சன்பார்மா, டாக்டர் ரெட்டீஸ், விப்ரோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 46.55 புள்ளிகள் உயர்ந்து, 5,565.65 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,577.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,510.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|