பதிவு செய்த நாள்
09 ஆக2013
10:26
மும்பை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இன்று ஆகஸ்ட் 9ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு மற்றும் மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 124.46 புள்ளிகள் அதிகரித்து, 18,789.34 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 46.55 புள்ளிகள் உயர்ந்து, 5,565.65 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,577.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,510.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|