பதிவு செய்த நாள்
11 ஆக2013
00:42
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 300 கோடி டாலர் (17,700 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 27,717 கோடி டாலராக (16.35 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்து உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு இந்த அளவிற்கு சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 97 கோடி டாலர் (5,723 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,017 கோடி டாலராக (16.53 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 200 கோடி டாலர் குறைந்து, 24,990 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது தவிர, கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும், 80.85 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 2,075 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.மேலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பும், 2.14 கோடி டாலர் சரிவடைந்து, 435 கோடி டாலராக குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை:கடந்த வாரத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவில், 61.81 ஆக மிகவும் சரிவடைந்திருந்தது.ரூபாய்மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, நடவடிக்கை மேற்கொண்டது.ஆனால், டாலர் விற்பனை செய்யப்பட்ட அளவிற்கு, அன்னியச் செலாவணி வரத்து இல்லாததால், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்து போயுள்ளது என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|