ரூபாய்மதிப்பை உயர்த்த மத்திய அரசுதிட்டம்:சொகுசு, மின்னணு சாதனங்களுக்கு அதிக சுங்க வரிரூபாய்மதிப்பை உயர்த்த மத்திய அரசுதிட்டம்:சொகுசு, மின்னணு சாதனங்களுக்கு ... ... "நாட்டின் பொருளாதார வளர்ச்சி5சதவீதத்திற்கும் கீழ் குறையும்' "நாட்டின் பொருளாதார வளர்ச்சி5சதவீதத்திற்கும் கீழ் குறையும்' ...
அன்னிய செலாவணி கையிருப்பு 300 கோடி டாலர் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2013
00:42

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 300 கோடி டாலர் (17,700 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 27,717 கோடி டாலராக (16.35 லட்சம் கோடி ரூபாய்) சரிவடைந்து உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு இந்த அளவிற்கு சரிவடைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 97 கோடி டாலர் (5,723 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,017 கோடி டாலராக (16.53 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 200 கோடி டாலர் குறைந்து, 24,990 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது தவிர, கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும், 80.85 கோடி டாலர் வீழ்ச்சி கண்டு, 2,075 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.மேலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பும், 2.14 கோடி டாலர் சரிவடைந்து, 435 கோடி டாலராக குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை:கடந்த வாரத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவில், 61.81 ஆக மிகவும் சரிவடைந்திருந்தது.ரூபாய்மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, நடவடிக்கை மேற்கொண்டது.ஆனால், டாலர் விற்பனை செய்யப்பட்ட அளவிற்கு, அன்னியச் செலாவணி வரத்து இல்லாததால், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்து போயுள்ளது என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)