பதிவு செய்த நாள்
11 ஆக2013
00:44
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வு போன்ற காரணங்களால், உள்நாட்டில், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,663 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,304 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 28,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 16 ரூபாய் உயர்ந்து, 2,679 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 128 ரூபாய் அதிகரித்து, 21,432 ரூபாய்க்கும், 10 கிராம் சுத்த தங்கம், 170 ரூபாய் உயர்ந்து, 28,650 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 46.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த திங்களன்று (5ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,639 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,112 ரூபாய்க்கும் விற்பனையானது. எனவே, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை, கிராமுக்கு, 40 ரூபாயும், சவரனுக்கு, 320 ரூபாயும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|