பதிவு செய்த நாள்
14 ஆக2013
01:12
புதுடில்லி:மத்திய அர”, இறக்குமதி செய்யப்படும், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான ”ங்க வரியை, 10 சதவீதமாக அதிகரித்து உள்ளது.ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து வருவதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வருகிறது.
பிளாட்டினம்:இதனை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அர”, தங்கம், வெள்ளி மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதி வரியை, உயர்த்த ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக,நேற்று, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது, தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான ”ங்க வரி, 8 சதவீதமாக உள்ளது. இது, 10 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதேபோன்று வெள்ளி மீதான, ”ங்க வரி, 6 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக, உயர்த்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்க தாது, கட்டிகள், பார்கள் மற்றும் வெள்ளி பார்கள் மீதான ”ங்க வரி, 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.இந்த வரி உயர்வின் மூலம், மத்திய அர”க்கு, 4,830கோடி ரூபாய்வருவாய்கிடைக்கும் என, அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 3.7 சதவீதம் அல்லது 7,000கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் வைத்திருக்க, மத்திய அர”, திட்டமிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது.
இதை கருத்தில் கொண்டு மத்திய அர”ம் ரிசர்வ் வங்கியும் பல்வேறு கட்டுபாட்டு நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றன.மேலும், அன்னிய செலாவணி வரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சிதம்பரம் தெரிவித்திருந்தார்.ரூபாய்மதிப்பு:உள்நாடு மற்றும் சர்வதேச நிலவரங்களால், டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த வாரத்தில், டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, இதுவரை இல்லாத அளவிற்கு, 61.80 ஆக மிகவும் சரிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாயின் வெளிமதிப்பு, 11 கா”கள் உயர்ந்து, 61.16ல் நிலை பெற்றது.
தங்கம் விலை விர்ர்...நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 616 ரூபாய் உயர்ந்து, 22,296 ரூபாய்க்கு விற்பனையானது.மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 2 சதவீதம் உயர்த்தி, 8 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை, நேற்று, கிடுகிடுவென உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,710 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,680 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,980 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 77 ரூபாய் உயர்ந்து, 2,787 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 616 ரூபாய் அதிகரித்து, 22,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 830 ரூபாய் உயர்ந்து, 29,810 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 49.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 46,335 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ""அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு பெருமளவு வீழ்ச்சி கண்டு உள்ளது. மேலும், மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதுடன், கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாகவும்தங்கம் விலை உயர்ந்துள்ளது'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|