தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்புதங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு ... ரயில்வே வருவாய்ரூ.10,629கோடியாக சரிவு:சென்ற ஜூலை மாதத்தில்... ரயில்வே வருவாய்ரூ.10,629கோடியாக சரிவு:சென்ற ஜூலை மாதத்தில்... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் விலை:வியாபாரிகளின் பதுக்கல் காரணமா...?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
01:31

புதுடில்லி: வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையைகேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது.கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியைபோல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை,மேலும் உயர்ந்து கொண்டு தான்போகும்.
ஏற்றுமதி:ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் லசல்கான் சந்தையில் வரத்தாகும், வெங்காயத்தில் பெரும்பகுதி, ஏற்றுமதியாகி விடுகிறது. கையிருப்பில் உள்ள சரக்கையும், மொத்த வியாபாரிகள் கூட்டணி அமைத்து பதுக்கி விடுவதாக கூறப்படுகிறது. இந்த சந்தையில் இருந்து தான், நாட்டின் முக்கிய சந்தைகளுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால், வரும் நாட்களில், வெங்காய வினியோகம் குறைந்து, அதன் விலைமேலும் உயர வாய்ப்புள்ளதாக, சில்லரை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த இரு வாரங்களாகவே, நாட்டின் முக்கிய சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகமிருந்தும், அதன் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.உதாரணமாக, நடப்பு ஆகஸ்ட் 1ம்தேதி, சென்னை,கோயம்பேடு சந்தைக்கு, 4,200 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அப்போது, மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 3,000 ரூபாயாக இருந்தது.
கடந்த 12ம்தேதி, கூடுதலாக, 600 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. அதாவது, மொத்தம், 4,800 குவிண்டால் சந்தைக்கு வந்தது. ஆனால், மொத்த விற்பனையில், ஒரு குவிண்டால் வெங்காயம் விலை, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, 5,800க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, சில்லரை விற்பனையில், ஒரு கிலோ வெங்காயம் விலை, 35 ரூபாயில் இருந்து, 65 - 70 வரை, தரத்திற்கேற்ப விற்கப்படுகிறது.
பெங்களூரு:வெங்காயம் விலை, கடந்த ஆண்டு இதே நாட்களில் விற்கப்பட்டதை விட, ஐந்து மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னையில், ஒரு குவிண்டால் வெங்காயம், 1,100 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த இரு வார நிலவரப்படி, பெங்களூரு, லசல்கான், புனே, சென்னை,கோல்கட்டா, மும்பை சந்தைகளுக்கு வெங்காயம் அதிக அளவில் வரத்தாகியுள்ளது.பெங்களூரு சந்தையில், கடந்த 1ம்தேதி, 10,253 குவிண்டால் வெங்காயம் வரத்தானது. இது, 12ம்தேதி, 44,720 குவிண்டாலாக அதிகரித்துள்ளது. அதுபோன்று, இதே காலத்தில், லசன்கான் சந்தையில், வெங்காயம் வரத்து, 4,580ல் இருந்து, 12 ஆயிரம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது.
இது, புனே சந்தையில், 7,314ல் இருந்து, 11,543 குவிண்டால் ஆகவும்,கோல்கட்டாவில், 1,280ல் இருந்து, 16,800 குவிண்டால் ஆகவும், மும்பையில், 5,300ல் இருந்து, 8,950 குவிண்டால் ஆகவும் உயர்ந்துள்ளது.நாட்டின் முக்கிய சந்தைகளில், கடந்த இரு வாரங்களில், வெங்காயம் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருவதன் பின்னணி குறித்து, மத்திய அரசு ஆராயவேண்டும் என, சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுவாக, சந்தைக்கு வரும் சரக்கு குறைந்தால், அதன் விலை உயர்வது வழக்கம். தற்போது பண்டிகை, திருமண காலம் எதுவும் இல்லாத நிலையில், வெங்காயத்திற்கானதேவையும் மிதமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதன் விலை மட்டும் உயர்ந்து வருவது, நுகர்வோரை பெரிதும் பாதித்து உள்ளது.தடை:இதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு மாதங்களில் புதிய வெங்காயம் வரத்தாவதற்கு முன்பாக, அதன் விலை, கிலோ, 100 ரூபாயை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சிறு வியாபாரிகள். வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்தால், அதன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என, அண்மையில் மத்தியவேளாண் துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)