பதிவு செய்த நாள்
14 ஆக2013
01:36
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் புதிய விதிமுறையின் கீழ், பொதுத் துறை நிறுவனங்கள், 2,500கோடி ரூபாய்மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன என, பிரைம்டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுத் துறை நிறுவனங்களில், பொதுமக்களின் பங்கு மூலதனம், குறைந்தபட்சம், 10 சதவீதம் என்ற அளவிலும், தனியார் துறை நிறுவனங்களில், 25 சதவீதம் என்ற அளவிலும் இருக்கவேண்டும். தனியார் துறை நிறுவனங்கள், இதை செயல்படுத்த, ஜூன், 3ம்தேதியுடன் காலக்கெடு முடிந்துள்ள நிலையில், சென்ற ஆக., 8ம்தேதியுடன் பொதுத் துறை நிறுவனங்களுக்கான கால அவகாசமும் நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, கடந்த, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இதுவரையிலுமாக பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், மத்திய அர”, ஒட்டு மொத்த அளவில், 2,501கோடி ரூபாயை திரட்டியுள்ளது.அண்மையில், பொதுத் துறையைச்சேர்ந்த இந்துஸ்தான் காப்பர், எம்.எம்.டி.சி., நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், பொதுமக்களுக்கென வரையறுக்கப்பட்ட, பங்கு மூலதன விகிதத்தை அதிகரித்துக் கொண்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|