பொது துறை நிறுவனங்கள்ரூ.2,500கோடிக்கு பங்கு விற்பனைபொது துறை நிறுவனங்கள்ரூ.2,500கோடிக்கு பங்கு விற்பனை ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61-லேயே நீடிக்கிறது!! இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61-லேயே நீடிக்கிறது!! ...
முப்படைகளுக்கு ரூ.2.35 லட்சம்கோடி ஆயுதங்கள் இறக்குமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
01:37

புதுடில்லி:கடந்த மூன்று நிதியா ண்டுகளில், நாட்டின் முப்படைகளுக்குத்தேவையான, 2.35 லட்சம்கோடி ரூபாய்மதிப்புள்ள ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பார்லிமென்டில் தெரிவித்தார். இதுகுறித்து, அவர்மேலும் கூறியதாவது:கடந்த, 2010 - 11 முதல் 2012 - 13 வரையிலான, மூன்று நிதியாண்டுகளில், ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்குதேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்களை இறக்குமதி செய்த வகையில், 2.35 லட்சம்கோடி ரூபாய்செலவிடப்பட்டு உள்ளது.
முப்படைகளில், ராணுவத்திற்கான ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்காக, மிக அதிக அளவில், அதாவது, 1.92 லட்சம்கோடி ரூபாய்வழங்கப்பட்டுள்ளது.விமான படை:இதில், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுக்காக, 1 லட்சம்கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.விமானப் படைக்காக, 38,900கோடி ரூபாய்மதிப்பிலான, ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. கப்பற் படை, கடந்த மூன்று நிதியாண்டுகளில், பாதுகாப்பு சாதனங்களின் இறக்குமதிக்காக, 4,000கோடி ரூபாய்செலவிட்டுள்ளது.
இத்தொகை, பி-18 விமானம் தாங்கி நீர்மூழ்கி கப்பலுக்காக, ஹர்பூன் ஏவுகணைகள் வாங்கவும், ரஷ்யாவில், நீர்மூழ்கி கப்பல்களின் புதுப்பிப்பு பணிகள் உள்ளிட்டவற்றுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.கடலோரத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக, ரடார், அதிவேகரோந்து படகுகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக, கடலோர காவல் படை, 400கோடி ரூபாய்செலவிட்டுள்ளது.
ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து,போலந்து, ஸ்லோவேக்கியா, பின்லாந்து மற்றும் இலங்கையில் இருந்து, முப்படைகளுக்குதேவையான, தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.இவற்றில், ரஷ்யா, 1 லட்சம்கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகத்துடன், முதலிடத்தை பிடித்துள்ளது.
முன்னுரிமை:ஆயுதங்கள் தயாரிப்பில், நாடு ”யசார்புடன் விளங்கவேண்டும் என்றநோக்கிலும், உள்நாட்டு தயாரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், ஆயுத கொள்முதல் நடைமுறையை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)