பதிவு செய்த நாள்
14 ஆக2013
01:38
மும்பை:பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்றும் மிகவும் விறுவிறுப்பாக காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது மற்றும் அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவில், பங்குகளை வாங்கியதுபோன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.குறிப்பாக,நேற்று முன்தினம் நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள், 408.35கோடி ரூபாய்மதிப்பிலான பங்குகளை வாங்கியு உள்ளனர் என, பங்குச் சந்தையின் தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் நன்கு இருந்தது. இதுவும், இந்திய பங்கு சந்தைகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.நேற்றைய வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி,மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் உலோக துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்குதேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 282.86 புள்ளிகள் அதிகரித்து, 19,229.84 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,248.11 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,864.81 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., டாட்டாமோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஹிண்டால்கோ,கோல் இந்தியா உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 86.90 புள்ளிகள் உயர்ந்து, 5,699.30 புள்ளிகளில் நிலை கொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|