பதிவு செய்த நாள்
14 ஆக2013
10:18
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் (09.26 மணியளவில்) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ.61.50-ஆக இருந்தது. முன்னதாக நேற்று(ஆகஸ்ட் 13ம் தேதி) ரூ.61.19-ஆக இருந்தது ரூபாயின் மதிப்பு.
ரூபாயின் மதிப்பில் தொடரும் சரிவை தடுக்க மத்திய அரசு நேற்று தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. அதனால் ரூபாயின் மதிப்பில் நேற்று சிறு ஏற்றம் கண்டநிலையில் இன்று உலகளவில் டாலருக்கு எதிராக பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்து இருப்பதும், இறக்குமதியாளர்களுக்கு அதிகளவு டாலர் தேவைப்படுவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து சரிவு இருப்பதாக அந்நிய செலாவணி தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|