இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61-லேயே நீடிக்கிறது!!இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.61-லேயே நீடிக்கிறது!! ... தங்கம் விலை சிறிது குறைந்தது தங்கம் விலை சிறிது குறைந்தது ...
ஒரே நாளில் 5.04 லட்சம் டிக்கெட் : ஐ.ஆர்.சி.டி.சி., புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2013
11:09

புதுடில்லி : ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையதளமான, ஐ.ஆர்.சி.டி.சி., நேற்று முன்தினம், ஒரே நாளில், 5.04 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, இது வரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. மிகவும் மந்தமாக இயங்கிய இணையதளம், 11 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு, இணையதளத்தின் வேகம் கூட்டப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு, 2,000 டிக்கெட் முன்பதிவு செய்யும் திறன், 7,200 ஆக அதிகரிக்கப்படுகிறது. அது போல், ஒரே நேரத்தில், 40 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இருந்தது, ஒரே நேரத்தில், 1.2 லட்சம் பேர் இணையதளத்தை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்க முடியும் என, மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 5.04 லட்சம், டிக்கெட்டுகள், இந்த இணையதளத்தின் மூலம், "இ - டிக்கெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன், இவ்வளவு அதிக டிக்கெட்டுகளை, இந்த இணையதளம், ஒரே நாளில் கையாண்டிருக்கவில்லை. கடந்த மார்ச் மாதம், 1ம் தேதி, இந்த இணையதளம், 5.02 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தது. அந்த சாதனை, நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மூலம், "ஆன் - லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு எளிதாக இருப்பதால், 2012 - 13ம் நிதியாண்டில், சராசரியாக நாள் ஒன்றுக்கு, 3.85 லட்சம் டிக்கெட்டுகள், இந்த இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட நிலையில், இப்போது, 4.30 லட்சமாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)