பதிவு செய்த நாள்
14 ஆக2013
11:09
புதுடில்லி : ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையதளமான, ஐ.ஆர்.சி.டி.சி., நேற்று முன்தினம், ஒரே நாளில், 5.04 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, இது வரை இல்லாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. மிகவும் மந்தமாக இயங்கிய இணையதளம், 11 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு, இணையதளத்தின் வேகம் கூட்டப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு, 2,000 டிக்கெட் முன்பதிவு செய்யும் திறன், 7,200 ஆக அதிகரிக்கப்படுகிறது. அது போல், ஒரே நேரத்தில், 40 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இருந்தது, ஒரே நேரத்தில், 1.2 லட்சம் பேர் இணையதளத்தை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்க முடியும் என, மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஒரே நாளில், 5.04 லட்சம், டிக்கெட்டுகள், இந்த இணையதளத்தின் மூலம், "இ - டிக்கெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன், இவ்வளவு அதிக டிக்கெட்டுகளை, இந்த இணையதளம், ஒரே நாளில் கையாண்டிருக்கவில்லை. கடந்த மார்ச் மாதம், 1ம் தேதி, இந்த இணையதளம், 5.02 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தது. அந்த சாதனை, நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மூலம், "ஆன் - லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு எளிதாக இருப்பதால், 2012 - 13ம் நிதியாண்டில், சராசரியாக நாள் ஒன்றுக்கு, 3.85 லட்சம் டிக்கெட்டுகள், இந்த இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட நிலையில், இப்போது, 4.30 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|