பதிவு செய்த நாள்
14 ஆக2013
23:59
மும்பை:உள்நாட்டில், நடப்பு வேளாண் பருவத்தில்,கொத்தவரை உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், கையிருப்பிலும், அதிகளவில் கொத்தவரை விதை உள்ளது. இதனால், இதன் விலை சரிவுஅடைந்து வருவதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தேசிய விளைபொருள் முன்பேர சந்தையில், வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில், 100 கிலோ கொத்தவரை விதையின் விலை, 3,960 ரூபாயாக சரிவடைந்தது. இது, கடந்த 2011ம் ஆண்டு நவம்பருக்கு பின், அதாவது, 21 மாதங்களுக்குப் பின் காணப்பட்ட வீழ்ச்சியாகும்.இருந்தபோதிலும், வர்த்தகத்தின் இறுதியில், இது, 4,020 ரூபாயாக உயர்ந்தது.
உள்நாட்டில், ராஜஸ்தான் மாநிலத்தில் தான், அதிகளவில் கொத்தவரை சாகுபடி செய்யப் படுகிறது. சாதகமான தட்பவெப்ப நிலை மற்றும் இதன் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால், இவ்வாண்டு கொத்தவரை உற்பத்தி நல்ல அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே, இதன் விலை, குறைந்து வருவதாக இந்தியாபுல்ஸ் கமாடிட்டிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் (ஆராய்ச்சி பிரிவு) பத்ருதீன் கான் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|