பதிவு செய்த நாள்
15 ஆக2013
00:12
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில், எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது. புயல் காரணமாக, ஹாங்காங் சந்தைக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் எண்ணெய்மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. அதேசமயம், பொறியியல், மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 137.75 புள்ளிகள் அதிகரித்து, 19,367.59 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,392.56 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,203.63 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள்,டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், பெல், டாக்டர் ரெட்டீஸ், விப்ரோ உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 43 புள்ளிகள் உயர்ந்து, 5,742.30 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,754.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,690.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|