பதிவு செய்த நாள்
15 ஆக2013
00:14
சென்ற ஜூலை மாதம், நாட்டின் பாமாயில் இறக்குமதி, 8.2 சதவீதம் சரிவுஅடைந்துள்ளது. இது, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத சரிவாகும்.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால், இறக்குமதி செலவினம் அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக, வர்த்தகர்கள், பாமாயில் இறக்குமதியை குறைத்துக் கொண்டுள்ளனர். சென்ற ஜூலையில், 5.50 லட்சம் டன் என்ற அளவிற்கே, பாமாயில் இறக்குமதி செய்யப் பட்டது. கடந்த ஆண்டு, இதே மாதத்தில் 5.99 லட்சம் டன் பாமாயில் இறக்குமதியானது. இதே காலத்தில், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கான, ஒட்டுமொத்த தாவர எண்ணெய்இறக்குமதி, 2.3 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 8.70 லட்சம் டன்னில் இருந்து, 8.50 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
உலகில், அதிக அளவிலான பாமாயில் இறக்குமதி மேற்கொள்ளும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.பாமாயில் உற்பத்தியில், இந்தோனேஷியா முதல் இடத்திலும், மலேஷியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.மேற்கண்ட நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதியை, இந்தியா குறைத்துக் கொண்டுள்ளதால், அந்நாடுகளில் அதன் இருப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கோலாலம்பூர் முன்பேரச் சந்தையில், பாமாயில் விலை, இறக்கமாக உள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|