பதிவு செய்த நாள்
15 ஆக2013
00:16
புதுடில்லி:சென்ற ஜூலை மாதத்தில், மொத்த விலை குறியீட்டு எண் (டபிள்யூ.பி.ஐ.,) அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், 5.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில்,4.86 சதவீதமாக இருந் தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், பொதுப் பணவீக்கம், 0.93 சதவீதம் உயர்ந்து உள்ளது என, மத்திய அரசு, வெளி யிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு:கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், பொதுப் பணவீக்கம், 7.52 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.மேலும், சென்ற மே மாதத்திற்கான பொதுப் பணவீக்கம், மறு மதிப்பீட்டில், 4.58 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, முந்தைய தற்காலிக மதிப்பீட்டில், 4.70 சதவீதமாக இருந்தது என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. கணக்கீட்டு மாதத்தில், உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், 11.91 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெங்காயம், உணவு தானியங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை, மிகவும் அதிகரித்ததை அடுத்து, இவற்றிற்கான பணவீக்கம் இரட்டை இலக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களிப்பு:மொத்த விலை குறியீட்டு எண், கணக்கிடுவதில், உணவு பொருட்களின் பங்களிப்பு, சென்ற ஜூலையில், 14.34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில், 9.74 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், தொடர்ந்து மூன்று மாதங்களாக உயர்ந்து வருகிறது.
சென்ற ஜூலை மாதத்தில், கடந்தாண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், வெங்காயத்தின் விலை, 145 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில், 114 சதவீதம் என்ற அளவில் இருந்தது.சென்ற ஜூன் மாதத்தில், 16.47 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்ட காய்கறிகளின் விலை, சென்ற ஜூலையில், 46.59 சதவீதமாக மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், தயாரிப்பு துறை பொருட்களுக்கான பணவீக்கமும், 2.75 சதவீதத்திலிருந்து, 2.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், நூலிழை, எண்ணெய்வித்துக்கள், தாதுக்கள் உள்ளிட்ட உணவு சாரா பொருட்களுக்கான பணவீக்கம், சென்ற ஜூலை மாதத்தில், 5.51 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில், 7.57 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.கணக்கீட்டு மாதத்தில், அரிசி விலை, 21.15 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, சென்ற ஜூன் மாதத்தில், 19.11 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதே போன்று, உணவு தானியங்களின் விலையும், 17.18 சதவீதம் என்ற அளவிலிருந்து, 17.66 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
உருளைக்கிழங்கு:சென்ற ஜூலையில், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றிற்கான பணவீக்கம், 10.94 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது. இது, ஜூன் மாதத்தில், 12.23 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.மேலும், உருளைக்கிழங்கின் விலை, மைனஸ், 6.45 சதவீதம் என்ற அளவிலும், பருப்பு வகைகளின் விலை, மைனஸ், 7.39 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றிற்கான பணவீக்கம், 7.12 சதவீதம் என்ற அளவிலிருந்து, 11.31 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து உள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் தான், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொதுப் பணவீக்கம், 5.65 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. அதன் பிறகு, இது, தற்போது தான், 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதிஆண்டின் இறுதியில், பணவீக்கம், 5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிட்டுள்ளது.முதல் காலாண்டு நிதி ஆய்வு கொள்கையில், பருவ மழை நன்கு உள்ளதால், உணவுப் பொருட்களின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுவதாக, ரிசர்வ் வங்கி, தெரிவித்திருந்தது.
சில்லரை பணவீக்கம்:இந்நிலையில், அதிக மழை காரணமாக, சப்ளை பாதிக்கப்பட்டுள்ள தால், காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சில்லரை விலை பண வீக்கத்தை குறைக்க, உணவுப் பொருட்களின் அளிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என, அண்மையில் நிதியமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்து இருந்தார். சென்ற திங்களன்று அர” வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற ஜூலையில், 9.64 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில், 9.87 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|