பதிவு செய்த நாள்
16 ஆக2013
00:40
புதுடில்லி:நாட்டின் அனல் மின் உற்பத்தி நிலையங்கள், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நான்கு மாத காலத்தில், 3 கோடி டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளன.சுற்றுச்சூழல் பிரச்னை மற்றும் புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைக்காதது போன்றவற்றால், உள்நாட்டில், போதுமான அளவிற்கு நிலக்கரி உற்பத்தி இல்லை.இதனால், வெளிநாடுகளிலிருந்து, அதிகளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதி யாண்டில், நாட்டின் மொத்த நிலக்கரி இறக்குமதி, 5 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 8.20 கோடி டன் நிலக்கரி தேவைப்படும் என, மதிப்பிடப் பட்டு உள்ளது. இதில், 3.20 கோடி டன் நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|