பதிவு செய்த நாள்
16 ஆக2013
00:46
மும்பை:நாட்டின் தாவர எண்ணெய்இறக்குமதி, சென்ற ஜூலை மாதத்தில், 8,89,493 டன்னாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 8,70,328 டன்னாக இருந்தது.
சென்ற ஜூன் மாதத்தில், தாவர எண்ணெய்இறக்குமதி, மிகவும் அதிகபட்ச அளவாக, 21 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சென்ற ஜூலையில், இதன் இறக்குமதி, 2.2 சதவீதம் அளவிற்கே உயர்ந்துள்ளது. இருப்பினும், நடப்பாண்டில், இதன் இறக்குமதி, 1.08 - 1.10 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில், 98.80 லட்சம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு 2012-13ம் எண்ணெய்பருவத்தின் (நவ.,-அக்.,), முதல் ஒன்பது மாதங்களில், நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய்இறக்குமதி, 10.58 சதவீதம் அதிகரித்து, 80.30 லட்சம் டன்னாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த எண் ணெய்பருவத்தில், 72.60 லட்சம் டன்னாக இருந்தது.
கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் உட்பட, நாட்டின் ஒட்டு மொத்த தாவர எண்ணெய்இறக்குமதி, நடப் பாண்டில், 1 கோடி டன்னை தாண்டி, புதிய சாதனை படைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பாண்டு கரீப் பருவத்தில், ஆகஸ்ட் 2ம் தேதி வரையிலுமான காலத்தில், எண்ணெய்வித்துக்கள் சாகுபடி பரப்பளவு,1.73 கோடி ஹெக்டேராக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு கரீப் பருவத்தில்,1.45 கோடி ஹெக்டேராக இருந்தது. உள்நாட்டில், இதன் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட் டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|