பதிவு செய்த நாள்
16 ஆக2013
00:55
கொச்சி:இந்திய இறால்கள் மீதான, இறக்குமதி எதிர் தீர்வையை அமெரிக்கா குறைத்து உள்ளது. கடந்த மே மாதம், அமெரிக்க வர்த்தக அமைச்சகம், இந்திய இறால்கள் மீது, தற்காலிக மதிப்பீட்டின் அடிப்படையில், 5.91 சதவீதம், இறக்குமதி எதிர் தீர்வை விதித்தது.இந்நிலையில், இந்திய இறால்களுக்கான, இறக்குமதி எதிர் தீர்வையை, 0.06 சதவீதம் குறைத்து, 5.85 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளதாக, அமெரிக்க வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள இறுதி மதிப்பீட்டு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகுவடார் நாட்டிலிருந்து, இறக்குமதியாகும் இறால்களுக்கு, இறக்குமதி எதிர் தீர்வையிலிருந்து அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது. இச்சலுகை தற்போது, விலக்கிக் கொள்ளப்பட்டு, 11.68 சதவீத இறக்குமதி எதிர் தீர்வை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவிற்கு இறால் ஏற்றுமதி மேற்கொள்வதில், தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில், ஈகுவடார், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன.
இவற்றில்,தாய்லாந்து,இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இறால்களுக்கான, இறக்கு மதி எதிர் தீர்வையை,அமெரிக்க வர்த்தக அமைச்சகம், முற்றிலுமாக நீக்கியுள்ளது.அதேசமயம், சீன இறால்களின் இறக்குமதிக்கு,18.61 சதவீதம் இறக்குமதி எதிர் தீர்வை விதிக்கப்பட்டுள்ளது.இது,முன்பு,5.76 சதவீதம் என்ற அள வில் இருந்தது.இது,சீனாவின் இறால் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என, கருதப் படுகிறது. மலே சிய இறால்களுக்கான, இறக்குமதி எதிர் தீர்வையை, அமெரிக்கா, 62.74 சதவீதத்திலிருந்து,54.5 சதவீதமாக குறைத்து உள்ளது. இதே போன்று, வியட்நாம் இறால்களுக்கான, இறக்குமதி எதிர் தீர்வையும், 6.07 சதவீதத்திலி ருந்து, 4.52 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான, மொத்த இறால் இறக்குமதியில், மலேசியாவின் பங்களிப்பு, 5 சதவீதம் என்ற அளவில் உள் ளது.சென்ற ஜூன் மாதம், அமெரிக்காவிற்கு அதிகளவில் இறால்களை ஏற்றுமதி செய்ததில், ஈகுவடார் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|