பதிவு செய்த நாள்
16 ஆக2013
14:39
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ந்த நிலையில், மதியம் 2 மணியளவில் கடும் சரிவை சந்தித்தது. 2மணி நிலவரப்படி சென்செகஸ் 700 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகளும் சரிந்தன. மதியம் 2.30 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 669.03 புள்ளிகள் குறைந்து 18698.56 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 208.35 புள்ளிகள் குறைந்து 5533.95 புள்ளிகளோடு காணப்பட்டது. ஏற்கனவே ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால், வங்கித்துறை பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஆனால் தங்கம் விலை மட்டும் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1000 அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (ஆகஸ்ட் 16ம் தேதி) ரூ.62 எனும் புதிய உச்ச நிலை சரிவை சந்தித்தது. வாரத்தின் இறுதி நாளான இன்று 10காசுகள் உயர்வுடன் ரூ.61.33 தொடங்கிய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்தது. காலை 10.30 மணியளவில் ரூ.62-க்கு சரிந்தது. இதற்கு முன் கடந்தவாரம் ரூ.61.80-ஆக சரிந்து இருந்ததே உச்சநிலை சரிவாக இருந்த நிலையில் இன்று வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்து இருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|