பதிவு செய்த நாள்
16 ஆக2013
17:03
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.62 எனும் உச்சநிலை சரிவை சந்தித்ததால் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன. மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 769 புள்ளிகளும், நிப்டி 234 புள்ளிகள் சரிந்தன.
வாரத்தின் கடைசிநாளான இன்று(ஆகஸ்ட் 16ம் தேதி) சரிவுடன் தொடங்கியது இந்திய பங்குசந்தைகள். லேசான சரிவு என்ற போதும் ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சநிலை சரிவாக ரூ.62-ஆக எட்டியது. இதனால் முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டு தங்களது பங்குகளை அதிகளவு விற்பனை செய்ய தொடங்கினர். குறிப்பாக வங்கி மற்றும் ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் விற்க தொடங்கினர். இதனால் காலை 10.30 மணிமுதலே இந்திய பங்குசந்தைகள் கடுமையாக சரிய தொடங்கின. முடிவாக வர்த்தக நேர இறுதியில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 769.41 புள்ளிகள் சரிந்து 18,598.18 எனும் நிலையிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 234.45 புள்ளிகள் சரிந்து 5,507.83 எனும் அளவிலும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்கு தவிர்த்து மற்ற நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.62 சதவீதமும், ஸ்டெர்லைட் 6.65 சதவீதமும், ஓன்ஜிசி 6.06 சதவீதமும், ஜிந்தால் ஸ்டீல் 5.46 சதவீதமும், எல் அண்ட் டி 5.19 சதவீதமும், மாருதி 4.84 சதவீதமும், எஸ்.பி.ஐ., 3.32 சதவீதமும், பெல் 10.70 சதவீதமும், கெயில் 6.49 சதவீதமும், எச்டிஎப்சி 5.81 சதவீதமும், ஐசிஐசிஐ 5.02 சதவீதமும் சரிவை சந்தித்தன.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பங்குசந்தைகள் இன்று ஆட்டம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|