ஸ்கூட்டரின் மைலேஜ் உங்கள் கையில்!ஸ்கூட்டரின் மைலேஜ் உங்கள் கையில்! ... சிறப்பான பருவமழையால் விதை, ரசாயனம் விற்பனை அமோகம் சிறப்பான பருவமழையால் விதை, ரசாயனம் விற்பனை அமோகம் ...
மருந்து துறையின் அன்னிய முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்ய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2013
00:18

புதுடில்லி:நாட்டின் மருந்துத் துறைக்கான, அன்னிய நேரடி முதலீட்டு (எப்.டீ.ஐ.,) கொள்கையில், மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, பார்லிமென்ட் உயர் மட்டக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆலோசனை:இதில்,அன்னிய நிறுவனங்கள்,இந்திய மருந்துத்துறை நிறுவனங்களில்,மேற்கொள்வதற்கான நேரடி முதலீட்டு உச்சவரம்பை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.வர்த்தக அமைச்சகம்,பல்வேறு அமைப்பு களு டன் ஆலோசித்து, இதுகுறித்த முடிவை அரசுக்கு தெரிவிக்கும்.அதன் பின், மருந்துத் துறையில், குறிப்பிட்ட சில பிரிவுகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பை குறைப்பது குறித்து, முடிவுஎடுக்கப்படும் என, அரசு துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புற்றுநோய்: பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் பொதுப் பண்பு அடிப்படையில், மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களை கையகப்படுத்துவதுடன்,அதுபோன்ற மருந்துகளின் விலையை உயர்த்தி விடுகின்றன. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட, பல கொடிய நோய்களுக்கான மருந்துகளின் விலை உயர்ந்து, அது, பயனீட்டாளர்களை மிகவும் பாதிப்படையச் செய்கிறது.
இதை கருத்தில் கொண்டே,மத்திய அரசு, மருந்துத் துறையில்,குறிப்பிட்ட சில பிரிவுகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பை குறைப்பது குறித்து, பரிசீலனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்துள் ளதாக தெரியவந்து உள்ளது.மேலும், உள்நாட்டில் உள்ள மருந்து நிறுவனங்களை கையகப் படுத்தும், பல பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் மொத்த விற்பனை வருவாயில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவிற்கே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிடுகின்றன.
பாதிப்பு:அதுவும், நோய் சார்ந்த ஆய்வுகளுக்காகவே செலவிடப்படுகிறது. புதிய மருந்துகள் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கை களுக்காக செலவிடுவது இல்லை.இது தவிர, இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தும் பல பன்னாட்டு நிறுவனங்கள், பொதுப் பண்பின் அடிப்படையிலான மருந்து கலவையில், ஒரு சில மாற்றங்களை செய்து விலையை உயர்த்தி விடுகின்றன. இதனால், குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துகளின் விலை அதிகரிப்பதுடன் அது, இந்திய நுகர்வோரை பாதிக்கின்றது.
பங்களிப்பு:ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள், சிறிய அளவில் செயல்படும் மருந்து நிறுவனங்களை கையகப் படுத்தி, சர்வதேச சந்தையில் அவற்றின் பங்களிப்பை தடுத்து நிறுத்தி விடுகின்றன.இந்திய மருந்து துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் தான், இது போன்ற பாதகமான அம்சங்கள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே மத்திய அரசு, மருந்து துறைக்கான அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)