பதிவு செய்த நாள்
17 ஆக2013
00:26
புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில், நாடு தழுவிய அளவில், பல மாநிலங்களில் சிறப்பான அளவில் மழை பொழிவு இருந்து வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதற்காலாண்டில், விதைகள் மற்றும் வேளாண் ரசாயனங்கள் விற்பனை சிறப்பாக அதிகரித்துள்ளது என, ஆய்வு நிறுவனம் ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பூச்சி கொல்லிகள்:இதற்கு எடுத்துக்காட்டாக, வேளாண் வித்துக்கள் மற்றும் பூச்சி கொல்லிகள், உரம் உள்ளிட்ட வேளாண் ரசாயன பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளது. காவேரி சீடு கம்பெனி,மான்சான்டோ இந்தியா,அத்வந்தா இந்தியா,பேயர் கிராப் சைன்ஸ், இன்செக்டிசைட்ஸ் இந்தியா,தானுக்கா அக்ரிடெக், ராலிஸ் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் விற்பனை, நடப்பு நிதியாண்டின் முதற்காலாண்டில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடப்பாண்டு, ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரையிலுமாக, தெற்கு -தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட, கூடுதலாக, 13 சதவீதம் பெய்துள்ளது.
நிலக்கடலை:நடப்பு கரீப் பருவத்தில், நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பில், நான்கில் மூன்று பகுதி அளவிற்கு, சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட, நடப்பு பருவத்தில், சோயா, நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்கள், பருத்தி, பருப்பு வகைகள் போன்றவற்றின் சாகுபடி பரப்பளவு பன்மடங்கு அதிகரித்துள் ளது.மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங் களில் பருவ மழை அதிகரிப்பால், பூச்சி தாக்குதல்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இதை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கண்ட மாநிலங்களில், பூச்சி மருந்து விற்பனை, சிறப்பான அளவில் அதிகரித்து உள்ளது.
அதே போன்று, பல மாநிலங்களில், தானிய விதைகளுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து, இவற்றின் விற்பனையும் நல்ல அளவில் இருந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|