மருந்து துறையின் அன்னிய முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்ய திட்டம்மருந்து துறையின் அன்னிய முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்ய திட்டம் ... பொருளாதார மந்த நிலையால் பாதிப்பு: இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைந்தது பொருளாதார மந்த நிலையால் பாதிப்பு: இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி ... ...
சிறப்பான பருவமழையால் விதை, ரசாயனம் விற்பனை அமோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2013
00:26

புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில், நாடு தழுவிய அளவில், பல மாநிலங்களில் சிறப்பான அளவில் மழை பொழிவு இருந்து வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதற்காலாண்டில், விதைகள் மற்றும் வேளாண் ரசாயனங்கள் விற்பனை சிறப்பாக அதிகரித்துள்ளது என, ஆய்வு நிறுவனம் ஒன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பூச்சி கொல்லிகள்:இதற்கு எடுத்துக்காட்டாக, வேளாண் வித்துக்கள் மற்றும் பூச்சி கொல்லிகள், உரம் உள்ளிட்ட வேளாண் ரசாயன பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளது. காவேரி சீடு கம்பெனி,மான்சான்டோ இந்தியா,அத்வந்தா இந்தியா,பேயர் கிராப் சைன்ஸ், இன்செக்டிசைட்ஸ் இந்தியா,தானுக்கா அக்ரிடெக், ராலிஸ் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் விற்பனை, நடப்பு நிதியாண்டின் முதற்காலாண்டில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடப்பாண்டு, ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரையிலுமாக, தெற்கு -தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட, கூடுதலாக, 13 சதவீதம் பெய்துள்ளது.
நிலக்கடலை:நடப்பு கரீப் பருவத்தில், நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பில், நான்கில் மூன்று பகுதி அளவிற்கு, சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட, நடப்பு பருவத்தில், சோயா, நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்கள், பருத்தி, பருப்பு வகைகள் போன்றவற்றின் சாகுபடி பரப்பளவு பன்மடங்கு அதிகரித்துள் ளது.மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங் களில் பருவ மழை அதிகரிப்பால், பூச்சி தாக்குதல்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இதை கட்டுப்படுத்தும் வகையில், மேற்கண்ட மாநிலங்களில், பூச்சி மருந்து விற்பனை, சிறப்பான அளவில் அதிகரித்து உள்ளது.
அதே போன்று, பல மாநிலங்களில், தானிய விதைகளுக்கான தேவை அதிகரித்ததை அடுத்து, இவற்றின் விற்பனையும் நல்ல அளவில் இருந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)