பதிவு செய்த நாள்
17 ஆக2013
11:24
சென்னை : தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம்-வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்த நிலையில் தொடர்ந்து இன்றும் ரூ.520 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் இன்று(ஆகஸ்ட் 17ம் தேதி, சனிக்கிழமை) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,946-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.23,568-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.695 உயர்ந்து ரூ.31,505-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.55.20-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.51,630-க்கும் விற்பனையாகிறது.
கடந்த இருதினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|