எலக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வுஎலக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வு ... தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 90 கோடி:சென்ற மே மாதம் வரையில்... தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 90 கோடி:சென்ற மே மாதம் வரையில்... ...
மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா...?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2013
17:52

தமிழகத்தின் பல பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. காரில் பயணம் செய்தால் நனையாமல் செல்லலாம் என்பது உண்மைதான். ஆனால் மழையில் பத்திரமாக செல்ல, சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்துதான் ஆக வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக கவனம் வேண்டும்.
* ஸ்டைலாக ஒரே கையால் ஸ்டியரிங்கை வளைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இரு கைகளாலும் பிடித்து ஓட்டுவது பாதுகாப்பானது.
* காரை ஓட்டும்போது மொபைல் போனில் பேசுவது, ஹெட்போனில் பாட்டுக் கேட்பது ஆகிய கவனத்தை திசை திருப்பும் விஷயங்களை சுத்தமாக "கட்' செய்து விட வேண்டும். உங்கள் கவனம் முழுவதும் ரோட்டின் மீதும், இடது, வலது பக்க ரியர் வியூ கண்ணாடிகளின் மீதும் மாறி, மாறி இருந்தால்தான், பயணம் பத்திரமாக முடிந்து நீங்கள் வீட்டில் இருக்க முடியும்.
அடை மழையில் செல்லும் உங்கள் காரின் முன்னே திடீரென ஒரு மரமோ, மின் கம்பமோ சாயலாம். மின் ஒயர்கள் துண்டாகி விழலாம் அல்லது தண்ணீரால் சூழப்பட்ட பெரிய பள்ளத்தில் டயர் இறங்கலாம். ஆகவே மிதமான வேகத்தில் கவனமாக ஓட்டுதல் முக்கியம்.
* மழையில் கார் ஓட்டும்போது, முகப்பு விளக்குகள் பத்திரம். அத்துடன் மிஸ்ட் லைட்டுகள் கட்டாயம் தேவை. இரவில் மட்டுமல்ல, விடாது மழை தட்டியெடுக்கும் பகல் வேளையிலும் தேவைப்படலாம். எதிரே வரும் வாகனங்களுக்கு, விளக்குகளால் "டிம்,டிப்' அடிப்பது, உங்களுக்கு மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகன ஓட்டுனருக்கும் பாதுகாப்பானது.
* மழையில் பயணிக்கும் போது, முன்னால் செல்லும் வாகனங்களை ஒட்டியபடி தொடர்வது நல்லதல்ல. முன்னே செல்லும் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு உங்களுக்கும் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் போகலாம். ஆகவே குறைந்தது மூன்று கார் இடைவெளியில், முன்னே செல்லும் வாகனத்தை பின்தொடர்வது பாதுகாப்பானது.
* மழை நாட்களில் பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை இயக்குவது நல்லது. வேகமாக செல்லும்போது, நீங்கள் எடுக்கும் திடீர் முடிவுகளுக்கு உங்கள் கார் கட்டுப்படாமல் போகலாம்.
* தண்ணீர் அதிகளவில் பாயும் ரோடு வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். காரின் இன்ஜினில் தண்ணீர் புகுந்து விட்டால் கார் நின்று விடும்.
* மழையில் முக்கியமாக பிரேக்குகளை கவனிக்க வேண்டும். பிரேக்கின் ஈரமான டிரம்கள், சாதாரண நிலையை விட மந்தமாகவே செயல்படும். ஆகவே திடீரென பிரேக் போட்டால் கார் நிற்காமல் போகலாம்.
* தண்ணீர் எதிர்ப்பு திரவத்தை கண்ணாடிகளிலும் ரியர்வியூ கண்ணாடிகளிலும் ஸ்ப்ரே செய்யலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)