பதிவு செய்த நாள்
17 ஆக2013
17:58
கார் சந்தையில் புதிது, புதிதாக நிறைய கார்கள் வந்தவாறு உள்ளன. இருந்தாலும், அனைத்து புதிய கார்களையும் உடனடியாக அரவணைத்து விடுவதில்லை இந்திய கார் பிரியர்கள். ஏற்கனவே சந்தையில் வெற்றி பெற்ற கார் நிறுவனங்களின் தயாரிப்புகளையே மீண்டும் மீண்டும் வாங்குவதுதான் ஆச்சரியம் அளிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் கார்களின் வரைபடத்தை பார்க்கும் பலரும் வியப்படைகிறார்கள். வெற்றிகரமாக விற்கும் கார்களே திரும்பவும் வெற்றி பெறுகிறது. சில சமயங்களில் கார் தயாரிப்பாளர்கள், தங்கள் நிறுவனங்களின் புதிய கார்களை விற்க முடியாமல் திணறுகின்றனர்.
இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் கார்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மாருதி ஆல்டோ. இந்த கார் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ஒவ்வொரு மாதமும் 20,000 கார்களுக்கு மேல் விற்பனையாகிறது. மாருதியின் அடுத்த அறிமுகம் ஆல்டோ கே 10. இந்த காரில் வேகன் ஆர், ஏ ஸ்டார், எஸ்டிலோ ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கே 10 பி வரிசை இன்ஜின் உள்ளது. ஹுண்டாய் சான்ட்ரோ மாதம் 7,000 கார்களும், டாடா இண்டிகா மாதம் 11,000 க்கும் மேற்பட்ட கார்களும் விற்பனையாகின்றன.
இந்தியர்களின் இந்த விசித்திரமான போக்கை பற்றி நிபுணர்கள் சிலர் கூறுகையில், "புதிதாக வரும் கார்களை விட ஏற்கனவே வெற்றிகரமாக விற்கும் கார்களை வாங்கவே மக்கள் விரும்புகின்றனர்' என்கின்றனர். ஹுண்டாய் நிறுவனம் சான்ட்ரோ காரை 12 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியும், இன்றும் கூட மாதம் 7,000 க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகின்றன. அந்த நிறுவனம் இந்த காரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. டாடா இண்டிகா 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 11,000 இண்டிகா கார்கள் (இண்டிகா வி2 டீசல், இண்டிகா செடா, இண்டிகா விஸ்டா) விற்பனையாகின்றன. மிகவும் பழமையான கார்களான மாருதி 800 மற்றும் ஹுண்டாய் ஆக்சன்ட் கார்கள் மாதம் குறைந்தது 1500 கார்கள் விற்பனையாகின்றன. இதுதான் கார் மார்க்கெட்டை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏனென்றால், புதிது புதிதாக எத்தனையோ நல்ல கார்கள் வந்துள்ள போதும், மக்கள் இந்த பழமையான கார்களை இன்னும் வாங்கத்தான் செய்கிறார்கள் என்பதுதான்!
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|