பதிவு செய்த நாள்
18 ஆக2013
03:37
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 143 கோடி டாலர் (8,437 கோடி ரூபாய்) அதிகரித்து, 27,860 கோடி டாலராக (16.44 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்து உள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக, 300 கோடி டாலர் (17,700 கோடி ரூபாய்) வீழ்ச்சி கண்டு, 27,717 கோடி டாலராக (16.35 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 145 கோடி டாலர் உயர்ந்து, 25,135 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றம் எதுவுமின்றி, 2,075 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு, 6.47 கோடி டாலர் சரிவடைந்து, 210.70 கோடி டாலராக குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|