பதிவு செய்த நாள்
18 ஆக2013
03:39
மும்பை:உள்நாட்டில் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய வர்த்தக அமைச்சகம், ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்கா யத்தின் குறைந்தபட்ச விலையை, 650 டாலராக நிர்ணயித்துள்ளது. இதன்படி, இந்த விலைக்கும் கீழ், வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது.விலை அதிகரிப்பு:உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, வெங்காயம் வரத்து இல்லாததால், கடந்த சில வாரங்களாக, இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடியாது என, வேளாண் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். குறைந்தபட்ச விலை:ஆனால், உள்நாட்டில், இதன் விலை உயர்ந்து வருவதால், அது நுகர்வோரை மிகவும் பாதித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டே, ஏற்றுமதிக்கான ஒரு டன் வெங்காயத்தின் குறைந்தபட்ச விலை, 650 டாலராக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.கடந்த மே மாதம், விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அர”, வெங்காயம் ஏற்றுமதி மீதான குறைந்தபட்ச விலையை முற்றிலுமாக நீக்கியது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் மீது குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அளவு:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மூன்று மாத காலத்தில், நம்நாட்டிலிருந்து, 6.39 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில், இதன் ஏற்றுமதி, 6.94 லட்சம் டன்னாக இருந்தது.கடந்த 2012-13 நிதியாண்டில், நாட்டின் வெங்காயம் ஏற்றுமதி, 1.66 கோடி டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|