அன்னிய செலாவணி கையிருப்பு 27,860 கோடி டாலராக அதிகரிப்புஅன்னிய செலாவணி கையிருப்பு 27,860 கோடி டாலராக அதிகரிப்பு ... சாகுபடி பரப்பளவு 9.30கோடி ஹெக்டேராக வளர்ச்சி:கூடுதல் மழை பொழிவால்... சாகுபடி பரப்பளவு 9.30கோடி ஹெக்டேராக வளர்ச்சி:கூடுதல் மழை பொழிவால்... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஒரே வாரத்தில் தங்கம் விலைசவரனுக்கு ரூ.1,888 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2013
03:39

சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை, அதிரடியாக சவரனுக்கு, 1,888 ரூபாய் அதிகரித்து உள்ளது.மத்திய அரசு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 8 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்நிலையிலும், தங்கம் வாங்குவது அதிகரித்து வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,881 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,048 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 65 ரூபாய் உயர்ந்து, 2,946 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 520 ரூபாய் அதிகரித்து, 23,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 695 ரூபாய் உயர்ந்து, 31,505 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 55.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 51,630 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த திங்களன்று, ஒரு கிராம் தங்கம், 2,710 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,680 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 236 ரூபாயும், சவரனுக்கு, 1,888 ரூபாயும் உயர்ந்துள்ளது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ""சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்து உள்ளது. மேலும், சீனா போன்ற வளர்ந்த நாடுகள், தங்களிடம் உபரியாக உள்ள, அன்னிய செலாவணியை, தங்கமாக மாற்றி வருவதால், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)