கைவினை பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்புகைவினை பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்பு ... மீண்டும் மீண்டும் அதலபாதளத்தில் ரூபாயின் மதிப்பு - ரூ.63.22!! மீண்டும் மீண்டும் அதலபாதளத்தில் ரூபாயின் மதிப்பு - ரூ.63.22!! ...
நாட்டின் உருக்கு பயன்பாடு2.41 கோடி டன்னாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
04:08

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாத காலத்தில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 2.41 கோடி டன்னாக அதிகரித்து உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 2.40 கோடி டன்னாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 0.2 சதவீதம் அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய உருக்கு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பொருளாதார மந்த நிலையால், மோட்டார் வாகனம், கட்டு மானம் உள்ளிட்ட துறைகளில், உருக்கு பயன்பாடு குறைந்து போயுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பருவ நிலை நன்றாக உள்ளதால், வரும் மாதங்களில், உருக்கிற்கான தேவை அதிகரிக்கும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மதிப்பீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 3.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.53 கோடி டன்னிலிருந்து, 2.61 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
உருக்கு தயாரிப்பில் முன்னணியில் உள்ள, செயில், டாட்டா ஸ்டீல் மற்றும் ராஷ்டிரிய இஸ்பத் நிகம் நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி, 9.6 சதவீதம் உயர்ந்து, 66 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது. மேலும், ஜே.எஸ்.டபிள்யூ மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி, ஒட்டு மொத்த அளவில், 74 லட்சம் டன்னாக உள்ளது.கணக்கீட்டு காலத்தில், நாட்டின் உருக்கு இறக்குமதி, 36 சதவீதம் சரிவடைந்து, 28 லட்சம் டன்னிலிருந்து, 18 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே போன்று உருக்கு ஏற்றுமதியும், 14.80 லட்சம் டன்னிலிருந்து, 14.10 லட்சம் டன்னாக சரிவடைந்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)