பதிவு செய்த நாள்
19 ஆக2013
10:08
மும்பை : ரூபாயின் மதிப்பு மீண்டும், மீண்டும் அதலபாதளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. ஏற்கனவே கடந்தவாரம் ரூ.62 தொட்ட ரூபாயின் மதிப்பு, இன்று மீண்டும் ஒரு வரலாற்று சரிவை சந்தித்து இருக்கிறது. வாரத்தின் முதல்நாளான இன்று(ஆகஸ்ட் 19ம் தேதி, திங்கட்கிழமை) வர்த்தகநேர துவக்கத்தில் ரூ.62.45 காசுகள் சரிவுடன் துவங்கிய ரூபாயின் மதிப்பு பின்னர் கொஞ்சம் மீண்டு 10 மணியளவில் ரூ.62.30 எனும் நிலையில் இருந்தது. பின்னர் மதியத்திற்கு மேல் மீண்டும் சரிய தொடங்கியது. வர்த்தகம் முடியும் தருவாயில் உச்சமாக ரூ.63.22 எனும் நிலையை தொட்டது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூ.61.65-ஆக இருந்தது ரூபாயின் மதிப்பு.
எண்ணெய் ஏற்றமதியாளர்களுக்கு டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், உள்நாட்டு சந்தையில் காணப்படும் சரிவாலும் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|