பதிவு செய்த நாள்
19 ஆக2013
11:55
சென்னை : தங்கம் - வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் வெள்ளியின் மீதான வரி 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்ந்ததால் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஆபரணதங்கத்தின் ஒருகிராம் விலை ரூ.2,938-க்கும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.23,504, 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.31,425-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை தங்கத்தை காட்டிலும் இன்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் அதிகரித்து ரூ.56.30-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.945 உயர்ந்து ரூ.52,575-க்கும் விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|