சேவைகள் ஏற்றுமதி1,235 கோடி டாலராக சரிவுசேவைகள் ஏற்றுமதி1,235 கோடி டாலராக சரிவு ... தனியார் பங்கு முதலீடு 233 கோடி டாலராக வளர்ச்சி தனியார் பங்கு முதலீடு 233 கோடி டாலராக வளர்ச்சி ...
தேவை அதிகரிப்பால் பருத்தி விலை விர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
00:13

மும்பை:உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், பருத்திக்கான தேவை அதிகரித்து உள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு கேண்டி (1 கேண்டி=356 கிலோ) பருத்தியின் விலை, 48,500 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
ஜவுளி ஆலைகள்: உள்நாட்டில் உள்ள ஜவுளி ஆலைகளுக்கு, பருத்திக்கான தேவை உயர்ந்து வருகிறது. இந்நிலையில்,சர்வதேசசந்தையில் பருத்தி நூல்இழைக்கான தேவை யும் வளர்ச்சி கண்டுள்ளது.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்துள்ள தால், ஏற்றுமதியாளர்களுக்கு பருத்தி மற்றும் நூலிழை ஏற்றுமதி மூலம், அதிக வருவாய்கிடைக்கிறது.
நடப்பு, 2012-13ம் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 1 கோடி பொதிகளாக (1 பொதி=170 கிலோ) இருக்கும் என, மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. இது,சர்வதேச பருத்தி ஏற்றுமதியில்,5ல் ஒரு பங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பேர வர்த்தகசந்தைகளிலும், பருத்தியின் விலை அதிகரித்து உள்ளது. என்.சி.டீ.இ.எக்ஸ்., முன்பேரசந்தையில், அக்டோபர் மாதம் வினியோகம் செய்வதற்கான ஒரு பொதி பருத்தியின் விலை, 20,000- 20,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு மே மாதம் முதல் இதுவரையிலுமாக, ஒரு பருத்தி பொதியின் விலை, 2,000 ரூபாய்உயர்ந்துள்ளது.சீனா, நம்நாட்டிலிருந்து, மிக அதிகளவில் பருத்தி நூலிழைகளை இறக்குமதி செய்து கொள்கிறது.
விலை குறையும்:பருத்திக்கான தேவை அதிகரித்து உள்ள அதே நேரத்தில், பருத்தி அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பருத்தி பயிர்கள் பாதிப்படைந்து உள்ளன. இதுவும், விலை உயர்வுக்கு காரணம் என, ஆமதாபாத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
பருத்திக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 1 கேண்டி பருத்தியின் விலை, 50 ஆயிரம் ரூபாயை எட்டவும் வாய்ப்புள்ளது.சந்தைக்கு புதிய பருத்தி வரத்து அதிகரிக்கும் நிலையில், இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என, அந்த வர்த்தகர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)