பதிவு செய்த நாள்
21 ஆக2013
00:26
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்றும் அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
சர்வதேச நிலவரங்கள்சாதகமாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்றவற்றால், "சென்செக்ஸ்' 0.34 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.அமெரிக்க மத்திய வங்கி, கடன்பத்திரங்களை திரும்ப பெறும் திட்டத்தை விரைவில் விலக்கி கொள்ள உள்ளது என்ற நிலைப் பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.
இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்றும், வரலாறு காணாத அளவிற்கு, வர்த்தகத்தின் இடையே, 64.11வரை வீழ்ச்சி கண்டது. பின்பு, 10 காசுகள் சரிவுடன், 63.23ல் நிலை பெற்றது. இதுவும், பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர்சாதனங்கள், மோட்டார் வாகனம், மருந்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், உலோகம், வங்கி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 61.48 புள்ளிகள்சரிவடைந்து, 18,246.04 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,306.46 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,970.98 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ்,சன்பார்மா, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலைசரிவடைந்தும், ஸ்டெர்லைட் இந்தியா, டாட்டா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 13.30 புள்ளிகள் குறைந்து, 5,401.45 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,417.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,306.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|