பதிவு செய்த நாள்
21 ஆக2013
00:31
நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, இரண்டாவது காலாண்டில், 82 ஒப்பந்தங்கள் மூலம், 233 கோடி டாலர் மதிப்பிற்கு, தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டின் முதல் காலாண்டில், மேற்கொள்ளப்பட்டதை விட, 2 மடங்கிற்கும் மேல் அதிகம் என, பிரைஸ் வாட்டர் கூப்பர் (பி.டபிள்யூ.சி.,) நிறுவனம் தெரிவித்துள்ளது.
தயாரிப்பு துறை:நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், 66 ஒப்பந்தங்கள் வாயிலாக, 92.90 கோடி டாலர் மதிப்பிற்கு, தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டது.கடந்த, 2012ம் ஆண்டில், இரண்டாவது காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடை விட, நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட பங்கு முதலீடு, 18சதவீதம் அதிகம் என, இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், தயாரிப்பு துறையில், மிகவும் அதிகபட்சமாக, ஆறு ஒப்பந்தங்கள் வாயிலாக, 79.60 கோடி டாலர் மதிப்பிற்கு தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, தகவல் தொழில் நுட்பம் அதுசார்ந்த சேவை துறை நிறுவனங்களில், 31 ஒப்பந்தங்கள் வாயிலாக, 45.30 கோடி டாலர் மதிப்பிற்கு தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிசக்தி:எண்ணிக்கை அடிப்படையில், இத்துறையே அதிக அளவில் பங்கு முதலீட்டை கவர்ந்துள்ளது.குறிப்பாக, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புசரிவடைந்துள்ளதால், அன்னிய நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவை துறைகளில், அதிகளவில் பங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
மேற்கண்ட இரு துறைகளைஅடுத்து, கணக்கீட்டு காலாண்டில், எரிசக்தி துறை நிறுவனங்களில், நான்கு ஒப்பந்தங்கள் வாயிலாக, 23.50 கோடி டாலர் தனியார் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், இத்துறை நிறுவனங்களில், இரண்டு ஒப்பந்தங்கள் மூலம், மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, 15.90 கோடி டாலராக இருந்தது.அதேசமயம், கணக்கீட்டு காலாண்டில், கல்வி, கப்பல்,சரக்கு போக்குவரத்து ஆகிய துறை நிறுவனங்களில், மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு,சற்று குறைந்துள்ளது.அதேபோன்று, வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு துறை நிறுவனங்களில், கணக்கீட்டு காலாண்டில், மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, எண்ணிக்கை மற்றும் மதிப்பின் அடிப்படையில்சரிவடைந்து உள்ளது.
மும்பை மண்டலம்:குறிப்பாக, கடந்தாண்டு மேற்கண்ட துறை நிறுவனங்களில், 10 ஒப்பந்தங்கள் வாயிலாக, 26.40 கோடி டாலர் மதிப்பிற்கு பங்கு முதலீடு மேற்கொள்ளப் பட்டிருந்தது. இது, நடப்பாண்டின் முதல் காலாண்டில், ஐந்து ஒப்பந்தங்கள் மற்றும் 13.80 கோடி டாலராகசரிவடைந்துள்ளது.அதிகளவில், தனியார் பங்கு முதலீட்டை கவர்ந்ததில், மும்பை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, தேசிய தலைநகர் பகுதி (என்.சி.ஆர்.,), பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|