மொபைல் போன் டிப்ஸ்மொபைல் போன் டிப்ஸ் ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஜாகுவார் எப் - டைப் சென்னையில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
17:31

ஜாகுவார் எப் டைப் கார்கள் சென்னையில் ஆகஸ்ட் பத்தாம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. எப் டைப் இரண்டு இருக்கை கொண்ட மாற்றிக் கொள்ளத்தக்க (கன்வர்ட்டிபிள்) ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். எக்ஸ்.கே கன்வர்ட்டிபிள் மற்றும் கூப்பே மாடல்களில் இணையும் இந்த புதிய எப் டைப் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜிடி மாடல்களின் வடிவமைப்பில் இணைகிறது. இந்தியாவின் எப் டைப் எஸ் மற்றும் எப் டைப் வி8 எஸ் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும். இவை முறையே 380 பிஎஸ் சக்தி அளிக்கும் ஜாகுவாரின் புதிய 3.0 லிட்டர் சூம்பர் சார்ஜ்ட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 495 பிஎஸ் சக்தி தரும் 5.0 லிட்டர் சூப்பர் சார்ஜ்ட் பெட்ரோல் என்ஜின் கொண்டதாகும். இதில் உயர் வகையான எப் டைப் வி8எஸ் 4.3 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதுடன் அதிகபட்சமாக மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும். எப் - டைப் எஸ் 4.9 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி அதிகபட்சமாக மணிக்கு 275 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் இந்தியாவின் துணைத் தலைவர் ரோஹித் சூரி அறிமுக விழாவில் பேசுகையில், "இந்திய சந்தையில் இந்த இரண்டு இருக்கை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய ஸ்போர்ட்ஸ் கார் சந்தையில் பெரும் மாற்றத்தை இது ஏற்படுத்தும் என நம்புகிறோம். இதன் உறுதியான வடிவமைப்பு மற்றும் ஒட்டுனரை மையப்படுத்திய பொறியியல் ஆகியவற்றுடன் இந்த கார் தமிழகத்தில் எங்களது பிராண்ட்டின் மீதான மதிப்பை விரிவுபடுத்தும் என்கிறார். ஜாகுவார் எப் டைப் எஸ் விலை 14,025,783 ரூபாய் மற்றும் உயர் ரக எப் டைப் வி8எஸ் விலை 16,491,238 ரூபாய் ஆகும். (சென்னை எக்ஸ் ஷோரூம் விலை)

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)